என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் |

தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ராணாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் வழியில் அரசியலிலும் குதித்தார். அமராவதி தொகுதியில் ராணா தனிப்பட்ட செல்வாக்கில் இருந்தார். இதனால் அமராவதி பார்லிமென்ட் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவ்நீத் கவுர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கபட்ட தனி தொகுதியில் நவ்நீத் கவுர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது வழக்கு தொரடப்பட்டது. மும்பை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின்போது நந்நீத்தின் ஜாதி சான்றிதழை கோர்ட் ரத்து செய்தது.
இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் நவ்நீத் ஆஜராகவில்லை. இதனால் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் நவ்நீத் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நவ்நீத் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.