தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் |
தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ராணாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் வழியில் அரசியலிலும் குதித்தார். அமராவதி தொகுதியில் ராணா தனிப்பட்ட செல்வாக்கில் இருந்தார். இதனால் அமராவதி பார்லிமென்ட் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவ்நீத் கவுர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கபட்ட தனி தொகுதியில் நவ்நீத் கவுர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது வழக்கு தொரடப்பட்டது. மும்பை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின்போது நந்நீத்தின் ஜாதி சான்றிதழை கோர்ட் ரத்து செய்தது.
இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் நவ்நீத் ஆஜராகவில்லை. இதனால் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் நவ்நீத் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நவ்நீத் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.