காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்திருந்தார். போதை மருந்து வழக்கு நடந்து வந்தாலும் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராகினி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது அவர் கன்னடத்தில் நடித்து வரும் படம் நானு ஒப்பா பாரதியா. இதனை பாபு கணேஷ் இயக்குகிறார் படத்தில் ராகினி ராணுவ கமாண்டராக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், அதனால் இது எனது மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம். நான் அண்டர்கவர் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த உண்மையான தோற்றம் மற்றும் உடல் மொழி இடத்தைப் பெற என் அப்பாவை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். திரையில் கமாண்டோவாக நடிப்பது கடினமானது, அதனால். நான் கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வருகிறேன். மேலும் ஒரு பெண் கமாண்டோவின் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்ஷன் காட்சிகளுக்காக துப்பாக்கி பயிற்சியும் பெற்று வருகிறேன் என்கிறார் ராகினி திவேதி.




