Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்களை மகிழ்விக்கணும் - மனம் திறந்த ‛மக்கள் இசை' ராஜலட்சுமி

24 அக், 2022 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Make-people-happy-says-Senthil-Rajalakshmi

துபாயில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி விட்டு சமீபத்தில் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கலம்பம் திரும்பிய ராஜலட்சுமி கூறியதாவது :

என்ன தான் படித்தாலும் பாரம்பரியம், பண்பாட்டை நம் மக்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. சிறிய வயதில் கிராமிய கலைகள் மீது எனக்கு ஆர்வம். அதுவும் மனிதனின் துவக்கம் முதல் முடிவு வரை அவனை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் கிராமியநாட்டுப்புற பாடல்களை கேட்டு வளர்ந்தவள் நான். அதனால் அதனை கற்று கொள்ள துவங்கினேன். படித்து முடித்து பத்தாண்டுகளுக்கும் மேலாக கலைநிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறேன். செந்தில்கணேஷும் இசைக்கல்வியை முடித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு அவங்க ஊரில் நடந்த கிராமிய கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தான் சந்தித்தோம்.

கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, நாட்டுப்புற பாடல்களை பாடுவது சைடு தொழில் இல்லை. முழு மூச்சாக இதை தான் செய்கிறோம். எதையும் விரும்பி ரசித்து செய்யும் போது சிறப்பாக அமையும். அதுதான் எங்களை உயர்த்தியிருக்கிறது. மக்களுக்கு என்ன தேவையோ அதை புரிந்து அதே நேரத்தில் நம் பாரம்பரியம், பண்பாட்டு, பழமைமாறாமல் கொடுக்கிறோம்.



மூன்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற இடத்திற்கு அழைத்திருந்தனர். வழக்கமாக விழா ஏற்பாட்டாளர்கள் உடன் வருவர். ஆனால் அந்த முறை நாங்கள் இருவர் மட்டுமே இருபது மணி நேரம் விமானத்தில் பயணித்து சென்றோம். மதியம் தான் நாங்கள் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது. அங்கு சென்றதும் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அங்கு பரிமாறிய ரசம் சாதத்தை சாப்பிட்டு கச்சேரியை துவக்கினோம். சினிமா வாய்ப்புகளும் வருகின்றன. செந்தில்கணேஷ் கூட கரிமுகன் என்ற சினிமாவில் நடித்தார். தொடர்ந்து சினிமாத்துறையில் இறங்குவோமா என்பது கடவுள் விட்ட வழி.

'என்ன மச்சான்... என்ன புள்ள...' என்ற பாடலையடுத்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற 'ஏய் சாமி, சாமி...' என்ற பாடல் இந்தளவுக்கு வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கவில்லை. விஸ்வாசம், அசுரன், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் டூயட் பாடல்களாக தான் பாடியிருக்கிறேன். எங்களை பொறுத்தவரை தாய் வீடு மக்கள் இசை தான்.

திரைப்பட பாடல்கள் கிடைப்பது போனஸ் போன்றது தான். தீபாவளி, பொங்கல், குழந்தைகளின் பிறந்த நாட்களில் எங்கே சென்றிருந்தாலும் எங்கள் வீடு அல்லது செந்தில் கணேஷ் வீடு திரும்பி விடுவோம்.

எந்த வேலையையும் பிடித்து நம்பி செய்ய வேண்டும். அதனால் தான் கிராமிய கலைஞர்களை கலாசார துாதர்களாக மக்கள் கருதுகின்றனர். நம் மண்ணோட அடையாளம் இந்த மக்கள் இசை, நாட்டுப்புறப் பாடல்கள். அதை இறுதி வரை தொடர வேண்டும் என்பது தான் ஆசை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெல்டிங் டூ ஆக்டிங் - ‛போலீஸ்' பசுபதிராஜ்வெல்டிங் டூ ஆக்டிங் - ‛போலீஸ்' ... ஜவ்வாது பெண்ணானது... ரெண்டு விண்மீன்கள் கண்ணானது...! - இதயம் திருடும் 'இன்ஸ்டா' குயின்ஸ் ஜவ்வாது பெண்ணானது... ரெண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kannan - Ramanathapuram,இந்தியா
24 அக், 2022 - 14:33 Report Abuse
Kannan கலைத்துறையில் உள்ளவர்கள் தற்போது மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றால் திமுக வாரிசை குளிர்விக்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in