காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

சினிமாவில் வில்லன் உள்பட பலதரப்பட்ட வேடங்களில் நடித்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 56 வயதாகும் நடிகர் பப்லு ஒரு 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து சோசியல் மீடியாவில், 56 வயது நபர் 23 வயதை பெண்ணை திருமணம் செய்துள்ளாரா? என்று பலரும் இந்த செய்தியை பரபரப்பாக்கி வருகிறார்கள்.
தனது இரண்டாவது திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பப்லு அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இது குறித்து என்னிடம் பலரும் கால் பண்ணி கேட்கிறார்கள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இன்னும் செய்து கொள்ளவில்லை. நான் எது செய்தாலும் வெளிப்படையாக செய்ய நினைப்பவன். அதனால் அனைவரது ஆசிர்வாதத்தோடுதான் இரண்டாவது திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த விளக்கத்தின் மூலம் பப்லு இன்னும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இனிமேல்தான் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.