சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சினிமாவில் வில்லன் உள்பட பலதரப்பட்ட வேடங்களில் நடித்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 56 வயதாகும் நடிகர் பப்லு ஒரு 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து சோசியல் மீடியாவில், 56 வயது நபர் 23 வயதை பெண்ணை திருமணம் செய்துள்ளாரா? என்று பலரும் இந்த செய்தியை பரபரப்பாக்கி வருகிறார்கள்.
தனது இரண்டாவது திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பப்லு அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இது குறித்து என்னிடம் பலரும் கால் பண்ணி கேட்கிறார்கள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இன்னும் செய்து கொள்ளவில்லை. நான் எது செய்தாலும் வெளிப்படையாக செய்ய நினைப்பவன். அதனால் அனைவரது ஆசிர்வாதத்தோடுதான் இரண்டாவது திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த விளக்கத்தின் மூலம் பப்லு இன்னும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இனிமேல்தான் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.