தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
கடந்த ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக பாடகி சின்மயி அறிவித்தார். அப்போது முதலே வாடகைத்தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதாக பலரும் விமர்சித்தனர். சமீபத்தில் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையான நிலையில் தான் கர்ப்பமாக இருந்த சமயம் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து அதுபற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சின்மயி.
அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் போட்டோவையும் பகிர்ந்தார். அவர் வெளியிட்ட இந்த போட்டோவிற்கு ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இந்த கமெண்ட்டை பார்த்து செம கடுப்பாகி விட்டார் சின்மயி.
அந்த நபரின் சமூகவலைதள கணக்கை பகிர்ந்து, ‛‛ஏற்கனவே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் எனது கர்ப்பக்கால போட்டோவை நான் வெளியிடவில்லை. அது தான் உண்மையான காரணம். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. அவர்களது வளர்ப்பு அப்படி'' என கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.