நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

கடந்த ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக பாடகி சின்மயி அறிவித்தார். அப்போது முதலே வாடகைத்தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதாக பலரும் விமர்சித்தனர். சமீபத்தில் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையான நிலையில் தான் கர்ப்பமாக இருந்த சமயம் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து அதுபற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சின்மயி.
அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் போட்டோவையும் பகிர்ந்தார். அவர் வெளியிட்ட இந்த போட்டோவிற்கு ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இந்த கமெண்ட்டை பார்த்து செம கடுப்பாகி விட்டார் சின்மயி.
அந்த நபரின் சமூகவலைதள கணக்கை பகிர்ந்து, ‛‛ஏற்கனவே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் எனது கர்ப்பக்கால போட்டோவை நான் வெளியிடவில்லை. அது தான் உண்மையான காரணம். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. அவர்களது வளர்ப்பு அப்படி'' என கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.