இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா நாக், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்க தேர்வானார். ஆனால் அந்த ஆடிசனில் கடைசியாக வந்து சேர்ந்த சந்தியா தேர்வாகி விட சரண்யாக அவரின் பள்ளி தோழியாக நடித்தார். அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைகாலம், ரெட்டை வாலு, ஈரவெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் சரண்யாவுக்கு அடையாளம் தந்தது பேராண்மை படம்தான்.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் வீட்டிலேயே முடங்கினார். இடையில் அவருக்கு திருமணமாகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவியது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்றாலும் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் சரண்யா தனது தற்போதைய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளர். உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க முயற்சிக்கலாமே என்று அவர்கள் அவரை கேட்டு வருகிறார்க்கள்.