ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் மிக சிலரே. அந்த வகையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற இவர் கதாநாயகியாக நடித்த, மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். இதுகுறித்த அறிவிப்பை பிரியா பவானி சங்கர் போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர் படக்குழுவினர். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தவிர இன்னும் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.




