திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் மிக சிலரே. அந்த வகையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற இவர் கதாநாயகியாக நடித்த, மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். இதுகுறித்த அறிவிப்பை பிரியா பவானி சங்கர் போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர் படக்குழுவினர். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தவிர இன்னும் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.