பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களிலும் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தெலுங்கில் லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கராய் என்ற இரண்டு படங்களில் நடித்தார் சாய் பல்லவி. அப்படி ஒரே ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்திருக்கிறது.
அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சாய்பல்லவி, ‛இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள் அடிக்கடி நடக்காது. ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்காக விருது பெற்று இருக்கிறேன். இந்த கதாபாத்திரங்களுக்காக பெற்ற அபரிமிதமான அன்பிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இது போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.