நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களிலும் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தெலுங்கில் லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கராய் என்ற இரண்டு படங்களில் நடித்தார் சாய் பல்லவி. அப்படி ஒரே ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்திருக்கிறது.
அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சாய்பல்லவி, ‛இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள் அடிக்கடி நடக்காது. ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்காக விருது பெற்று இருக்கிறேன். இந்த கதாபாத்திரங்களுக்காக பெற்ற அபரிமிதமான அன்பிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இது போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.