எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்த தகவலை அவர்கள் வெளியிட்டதை அடுத்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையாகவும் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடிகர் கார்த்தி, ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், பெற்றோர்களின் அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று எழுதி இருக்கிறார் கார்த்தி. இதற்கு விக்னேஷ் சிவன் கார்த்திக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதை அடுத்து அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.