ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி |

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கார்த்தி உள்ளிட்ட பலருக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படத்தில் பெரிய பளுவேட்டரையர் வேடத்தில் நடித்த சரத்குமார், ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அது குறித்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், ரஜினியை சந்தித்த இன்றைய நாள் மிக சிறப்பாக தொடங்கியது. அவரிடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பெரிய பளு வேட்டரையர் வேடம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு காபி அருந்திக்கொண்டு எங்களது தொழில் பற்றி நட்பு ரீதியாக பேசிக் கொண்டோம். அப்போது எங்களுடன் எனது மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார். அவர் நடித்து வரும் படங்கள் குறித்தும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இப்படி எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கிய ரஜினிக்கு என்னுடைய நன்றி என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.