'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கார்த்தி உள்ளிட்ட பலருக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படத்தில் பெரிய பளுவேட்டரையர் வேடத்தில் நடித்த சரத்குமார், ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அது குறித்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், ரஜினியை சந்தித்த இன்றைய நாள் மிக சிறப்பாக தொடங்கியது. அவரிடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பெரிய பளு வேட்டரையர் வேடம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு காபி அருந்திக்கொண்டு எங்களது தொழில் பற்றி நட்பு ரீதியாக பேசிக் கொண்டோம். அப்போது எங்களுடன் எனது மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார். அவர் நடித்து வரும் படங்கள் குறித்தும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இப்படி எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கிய ரஜினிக்கு என்னுடைய நன்றி என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.