பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கார்த்தி உள்ளிட்ட பலருக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படத்தில் பெரிய பளுவேட்டரையர் வேடத்தில் நடித்த சரத்குமார், ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அது குறித்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், ரஜினியை சந்தித்த இன்றைய நாள் மிக சிறப்பாக தொடங்கியது. அவரிடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பெரிய பளு வேட்டரையர் வேடம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு காபி அருந்திக்கொண்டு எங்களது தொழில் பற்றி நட்பு ரீதியாக பேசிக் கொண்டோம். அப்போது எங்களுடன் எனது மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார். அவர் நடித்து வரும் படங்கள் குறித்தும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இப்படி எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கிய ரஜினிக்கு என்னுடைய நன்றி என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.