மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பாலிவுட்டில் இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். கல்யாண வீடுகளில் தவறாமல் வாழை மரம் கட்டுவது போல பாலிவுட்டின் முக்கிய சினிமா நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெற்று வருபவர் தான் கரண் ஜோஹர். அதுமட்டுமல்ல மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது இவர் நடத்தி வரும் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தவறாமல் கலந்து கொள்வதும் வழக்கம்.
இந்த நிலையில் காபி வித் கரண் சீசன்-7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கரண் ஜோஹர், “சமீபத்தில் விக்கி கவுஷல், கத்ரினா கைப் திருமணம் நடைபெற்றபோது எனக்கு அழைப்பு அனுப்பவில்லை.. சமீப காலமாகவே பாலிவுட்டில் நடைபெறும் சில திருமண நிகழ்வுகளில் எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. இதோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் கூட அதுபற்றி இங்கே எதையும் பேசவில்லை” என அங்கே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சில நட்சத்திரங்களைப் பார்த்து தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார் கரண் ஜோஹர். மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பவில்லை என்பதை கேட்ட பின்னரே என் மனம் கொஞ்சம் அமைதியானது என்றும் கூறியுள்ளார் கரண் ஜோஹர்.