சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் யார் என்றால் அது சரத்குமார் தான். கதாநாயகனாக, முக்கிய வேடத்தில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் என தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வான்டட் நடிகராக வலம் வரும் சரத்குமார். நாளை மறுநாள் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துவரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் சரத்குமார்.
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2009ல் மலையாளத்தில் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் சரத்குமார்.. பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதேபோல கடந்த 2014ல் ஆஷா பிளாக் என்கிற படத்தில் நடித்த சரத்குமார் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




