ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் யார் என்றால் அது சரத்குமார் தான். கதாநாயகனாக, முக்கிய வேடத்தில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் என தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வான்டட் நடிகராக வலம் வரும் சரத்குமார். நாளை மறுநாள் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துவரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் சரத்குமார்.
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2009ல் மலையாளத்தில் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் சரத்குமார்.. பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதேபோல கடந்த 2014ல் ஆஷா பிளாக் என்கிற படத்தில் நடித்த சரத்குமார் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.