மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் யார் என்றால் அது சரத்குமார் தான். கதாநாயகனாக, முக்கிய வேடத்தில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் என தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வான்டட் நடிகராக வலம் வரும் சரத்குமார். நாளை மறுநாள் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துவரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் சரத்குமார்.
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2009ல் மலையாளத்தில் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் சரத்குமார்.. பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதேபோல கடந்த 2014ல் ஆஷா பிளாக் என்கிற படத்தில் நடித்த சரத்குமார் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.