'2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(36) உடல்நலக் குறைவால் திடீரென மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தீபிகாவிற்கு உடல்சோர்வு ஏற்பட்டு மயக்க அடைவது போன்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அவருக்கு உடலில் என்ன பிரச்னை என்ற விபரம் வெளியாக வில்லை.
சில வாரங்களுக்கு முன் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தில் நடித்தபோதும் தீபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது இதய துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.