பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… |

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் பெரிய விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். அமெரிக்கத் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அந்த விருதுகளில் வெளிநாடுகளில் வெளியாகும் படங்களுக்கும் சில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பல நாடுகள் அவர்கள் நாடுகளில் வெளியாகும் படங்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' என்ற படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளார்.
போட்டியில் இருந்த, 13 படங்களில் தமிழிலிருந்து 'இரவின் நிழல்', தெலுங்கிலிருந்து 'ஆர்ஆர்ஆர், ஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் குஜராத்திப் படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பட்டது. 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கருக்குத் தேர்வு செய்யப்படாதது குறித்து தெலுங்கு ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
'சிறந்த வெளிநாட்டுப் படம்' விருது வாங்க அந்தந்த நாடுகள் தேர்வு செய்து அனுப்பும் படங்களைத்தான் ஆஸ்கர் விருது குழு பரிசீலிக்கும். இருப்பினும், 'ஆர்ஆர்ஆர்' படம் நேரடியாக ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.