தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் நல்ல வசூல் கொடுத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் கவும் மேனன். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசனும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்ற போது, வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கி விட்டதாகவும், அந்த பணிகள் முடிவடைந்ததும் படப்பிடிப்பை தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைக்கு வந்து நான்கு நாட்களில் 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




