காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' மற்றும் 'பூவே பூச்சூடவா' தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தன. அந்த தொடர்களில் நடித்த ஷபானாவுக்கும், ரேஷ்மாவுக்கும் ரசிகர்களின் ஆதரவும் பெருகியுள்ளது. ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழின் 'அபி டெய்லர்' தொடரில் நடித்து வருகிறார். 'செம்பருத்தி' தொடர் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஷபானா எந்த பிராஜெக்டில் கமிட்டாக போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் புதிய படமொன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 'பகையே காத்திரு' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் சின்னத்திரை நடிகைகளான ரேஷ்மாவும், ஷபானாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். ஒரே தொலைக்காட்சியில் நடிகைகளாக என்ட்ரி கொடுத்த தோழிகள் இருவரும் தற்போது ஒரே படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
'பகையே காத்திரு' படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். வரலட்சுமி, ஸ்மிருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கின்றனர். மணிவேல் இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.