48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து |

உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் விஜயகுமார். அதன்பிறகு உறியடி 2ம் பாகத்தை இயக்கி நடித்தார். இதனை சூர்யா தயாரித்தார். தற்போது சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கிறார். காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக 'அயோத்தி' படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு 'வத்திக்குச்சி' திலீபன், 'கைதி' ஜார்ஜ் மரியான், 'வடசென்னை' பாவல் நவகீதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார், மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கி உள்ளனர்.




