3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! |
'காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கடந்த 2018ல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். 2020ல் மாரடைப்பால் திடீரென காலமானார் சிரஞ்சீவி. அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னாவிற்கு கணவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் மேக்னா படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரை மறு திருமணம் செய்ய சொல்லி சிலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி மேக்னா கூறுகையில், ‛‛ஒரு கூட்டம் என்னை 2வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர் உங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றனர். நான் எதை கேட்பது. பலரும் பல விதமான ஆலோசனைகளை சொல்வார்கள். முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என எப்போதும் எனது கணவர் கூறுவார். அவர் கூறியபடி இப்போதைக்கு நான் எனது குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி மட்டும் சிந்திக்கிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை'' என்கிறார்.