பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் |
ஆந்திர அரசியலையும் என்.டி.ஆர் குடும்பத்தையும் பிரிக்க முடியாது. என்.டி.ராமராவ் 4 முறை ஆந்திர முதல்வராக இருந்தார். அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார், என்.டி.ஆரின் மூத்த மகன் பாலகிருஷ்ணா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையின் என்டிஆரின் பேரன் ஜூனியர் என்டிஆர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்ட ஜூனியர் என்டிஆரை உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ஐதராபாத் விசிட்டின் போது அவரே அழைத்து ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசி உள்ளார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து அமித்ஷா கூறுகையில் “திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் மாணிக்கமுமான ஜூனியர் என்டிஆரை சந்தித்தது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்குதான் அமித்ஷா ஐதராபாத் வந்துள்ளார். இந்த நேரத்தில் நடந்த இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமீபத்தில் அமித்ஷா ஆர்ஆர்ஆர் படம் பார்த்தாகவும் அதில் சிறப்பாக நடித்த ஜூனியர் என்டிஆரை நேரில் அழைத்து பாராட்டினார். வேறு காரணம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.