100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார். திரிஷாவுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றும் அவர் குறித்து பரவும் இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சி மற்றும் குழப்பமடைய செய்துள்ளது. அவரது பதிவில், ‛கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கவேண்டும். ஒரு குப்பை தன்னைத்தானே வெளியேறி கொள்வதைப் போன்றது எனப் பதிவிட்டுள்ளார். யாரை மனதில் வைத்து அவர் இதை பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுபு்பியுள்ளனர்.