‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார். திரிஷாவுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றும் அவர் குறித்து பரவும் இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சி மற்றும் குழப்பமடைய செய்துள்ளது. அவரது பதிவில், ‛கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கவேண்டும். ஒரு குப்பை தன்னைத்தானே வெளியேறி கொள்வதைப் போன்றது எனப் பதிவிட்டுள்ளார். யாரை மனதில் வைத்து அவர் இதை பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுபு்பியுள்ளனர்.




