சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் மட்டுமே பல நூறு கோடிகளை வசூலித்து முதலிடத்தை பெற்று வந்தன. இந்தநிலையில் சமீபகாலமாக ஹிந்தியில் வெளியாகி வரும் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவி வருகின்றன. குறிப்பாக நடிகர் அக்ஷய் குமார் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேசமயம் தென்னிந்தியாவில் தயாராகி ஹிந்தியில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் ஆகிய படங்கள் அங்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதித்து காட்டின.
இதனால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ரசிகர்களின் மனநிலை வேறுவிதமாக மாறி உள்ளதோ என்பது பற்றி ஆராயாமல் வழக்கமான பாணியிலேயே படங்களை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்தநிலையில் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் ஹிந்தி படங்களின் தோல்விகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மக்களிடம் தற்போது பாக்கெட்டில் பணம் இல்லை.. ஒரு படத்தை பார்ப்பதற்கு செலவு செய்ய வேண்டுமென்றால் அந்த படத்தை பற்றி நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே தியேட்டருக்கு செல்ல விரும்புகிறார்கள்.. அப்படி இல்லை என்றால் கேஜிஎப், பாகுபலி போன்ற எதிர்பார்ப்பு கொண்ட இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புகிறார்கள்.. இப்போது அவர்கள் சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றை மறந்து விட்டு நாட்டில் நிலவும் பொருளாதார பற்றாக்குறை குறித்து தான் பேசி வருகிறார்கள்” என்று அறிவார்ந்த விதமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.