‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ஆல்யா மானசா. அதன்பின் பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது ரியா விஸ்வநாத் என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆல்யா விலகிய பின் சீரியல் ட்ராப் ஆகிவிடும் என பலரும் கருதி வந்த நிலையில், ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக 500வது எபிசோடை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை ஆல்யா மானசாவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ராஜா ராணி சீசன் 2வின் இயக்குநர் பிரவீன் பேசும்போது, 'ஷூட்டுக்கு ஆன் டைம் வருவதில் ஆல்யா தான் முதல் ஆள். குதிக்கிற மாதிரியான ஷாட் என்று சொன்னால் போதும், உடனே மாடியிலிருந்து கூட குதிக்க தயராகிவிடுவார். சின்சியாரிட்டியின் மறு உருவமே ஆல்யா தான்' என்பது போல் அவரை புகழ்ந்தார்.
இதன்காரணமாகவும், குழந்தை பிறந்த பின் ஆல்யா கலந்து கொள்ளும் முதல் டிவி நிகழ்ச்சி இதுதான் என்பதாலும் ரசிகர்கள் பலரும் வெற்றிவிழா நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியானது வரும் சுதந்திர தினத்தன்று மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.