அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு. அதாவது பவள விழா ஆண்டு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனது சமூக வலைத்தள கணக்கின் டிபியில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டிபியில் தேசிய கொடியை பதிவிடுவது வைரலாகி சாதாரண பொதுமக்கள் முதல் பிரதமர் வரை தேசிய கொடியை டிபியில் வைத்து வைரலாக்கினார்கள், கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்கள் டிபியில் தேசிய கொடியை வைத்து முன்னோடியாக நிகழ்ந்தார்கள்.
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், பின்னணி பாடகி சித்ரா உள்பட பலரும் டிபியில் தேடிய கொடியை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட ஓரிரு நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற திரைநட்சத்திரங்கள் செய்யவில்லை. "உங்கள் கும்பகர்ண தூக்கம் போதும் நாட்டுக்காக கொஞ்சம் விழித்திருங்கள்" என்று நெட்டிசன்கள் தமிழ் ஹீரோக்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.