என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு. அதாவது பவள விழா ஆண்டு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனது சமூக வலைத்தள கணக்கின் டிபியில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டிபியில் தேசிய கொடியை பதிவிடுவது வைரலாகி சாதாரண பொதுமக்கள் முதல் பிரதமர் வரை தேசிய கொடியை டிபியில் வைத்து வைரலாக்கினார்கள், கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்கள் டிபியில் தேசிய கொடியை வைத்து முன்னோடியாக நிகழ்ந்தார்கள்.
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், பின்னணி பாடகி சித்ரா உள்பட பலரும் டிபியில் தேடிய கொடியை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட ஓரிரு நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற திரைநட்சத்திரங்கள் செய்யவில்லை. "உங்கள் கும்பகர்ண தூக்கம் போதும் நாட்டுக்காக கொஞ்சம் விழித்திருங்கள்" என்று நெட்டிசன்கள் தமிழ் ஹீரோக்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.