ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு. அதாவது பவள விழா ஆண்டு. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதனை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனது சமூக வலைத்தள கணக்கின் டிபியில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டிபியில் தேசிய கொடியை பதிவிடுவது வைரலாகி சாதாரண பொதுமக்கள் முதல் பிரதமர் வரை தேசிய கொடியை டிபியில் வைத்து வைரலாக்கினார்கள், கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்கள் டிபியில் தேசிய கொடியை வைத்து முன்னோடியாக நிகழ்ந்தார்கள்.
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, உன்னி முகுந்தன், பின்னணி பாடகி சித்ரா உள்பட பலரும் டிபியில் தேடிய கொடியை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட ஓரிரு நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற திரைநட்சத்திரங்கள் செய்யவில்லை. "உங்கள் கும்பகர்ண தூக்கம் போதும் நாட்டுக்காக கொஞ்சம் விழித்திருங்கள்" என்று நெட்டிசன்கள் தமிழ் ஹீரோக்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.