நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையான ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண வசூல் செய்து வருவதாக சினிமா பாடலாசிரியரான சினேகன் புகார் கூறியுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் 'சினேகம் பவுண்டேசன்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். எனது அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சட்டத்திற்கு உட்பட்டு செய்து வருகிறேன். சமீபகாலமாக எனது அறக்கட்டளை பெயரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தியும், தான் தான் 'சினேகன் அறக்கட்டளை' நிறுவனர் என்று கூறியும் நிதி வசூலித்ததாக பல புகார்கள் வந்தது.
நான் பொதுமக்களிடம் பொது வெளித்தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. ஜெயலட்சுமி எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறை எனது கவனத்துக்கு கொண்டு வந்தது.
எனது அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களிடம் பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், அந்த போலியான இணைய தளத்தை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.