நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த பரபரப்பு வருமான வரித்துறை ரெய்டு. தமிழ் சினிமாவில் இன்று உருவாகும் பெரும்பாலான படங்களில் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச் செழியனின் பணம் இருக்கும். அவரிடம் பணம் பெற்றே முன்னணி நடிகர்கள் கூட படங்கள் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களின் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
குறிப்பாக தயாரிப்பாளர் அன்புசெழியன், அவரது சகோதரர் அழகர், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன். ராஜ்கமல் பிலிம்ஸ் மகேந்திரன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், விநியோகஸ்தர் அருள்பதி, பைனான்சியர் ஜஷ்வந்த்., ஜெமினி லேப் ரவி, பிரசாத் லேப் போன்றவர்கள் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நான்கு நாட்களாக நீடித்த இந்த ரெய்டு முடிந்துள்ளது. இவர்களின் வீடு அலுவலகங்களில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விபரம் இனிமேல் தான் தெரிய வரும்.