மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த பரபரப்பு வருமான வரித்துறை ரெய்டு. தமிழ் சினிமாவில் இன்று உருவாகும் பெரும்பாலான படங்களில் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச் செழியனின் பணம் இருக்கும். அவரிடம் பணம் பெற்றே முன்னணி நடிகர்கள் கூட படங்கள் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களின் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
குறிப்பாக தயாரிப்பாளர் அன்புசெழியன், அவரது சகோதரர் அழகர், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன். ராஜ்கமல் பிலிம்ஸ் மகேந்திரன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், விநியோகஸ்தர் அருள்பதி, பைனான்சியர் ஜஷ்வந்த்., ஜெமினி லேப் ரவி, பிரசாத் லேப் போன்றவர்கள் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நான்கு நாட்களாக நீடித்த இந்த ரெய்டு முடிந்துள்ளது. இவர்களின் வீடு அலுவலகங்களில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விபரம் இனிமேல் தான் தெரிய வரும்.