என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த பரபரப்பு வருமான வரித்துறை ரெய்டு. தமிழ் சினிமாவில் இன்று உருவாகும் பெரும்பாலான படங்களில் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச் செழியனின் பணம் இருக்கும். அவரிடம் பணம் பெற்றே முன்னணி நடிகர்கள் கூட படங்கள் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களின் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
குறிப்பாக தயாரிப்பாளர் அன்புசெழியன், அவரது சகோதரர் அழகர், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன். ராஜ்கமல் பிலிம்ஸ் மகேந்திரன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், விநியோகஸ்தர் அருள்பதி, பைனான்சியர் ஜஷ்வந்த்., ஜெமினி லேப் ரவி, பிரசாத் லேப் போன்றவர்கள் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நான்கு நாட்களாக நீடித்த இந்த ரெய்டு முடிந்துள்ளது. இவர்களின் வீடு அலுவலகங்களில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விபரம் இனிமேல் தான் தெரிய வரும்.