ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் 'வாத்தி'.
இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. யு டியூபில் வெளியான இரண்டு மொழி டீசர்களில் தமிழ் டீசரை விட தெலுங்கு டீசருக்குக் கூடுதலான வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் தனுஷ் படத்திற்கான வழக்கமான வரவேற்பு இது இல்லை. தமிழ் டீசர் 14 லட்சம் பார்வைகளையும், தெலுங்கு டீசர் 18 லட்சம் பார்வைகைளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு இரு மொழிப் படம் என்று சொன்னாலும் காட்சிகள் தெலுங்குப் படங்களைப் போலத்தான் உள்ளது. போலீஸ் நிலைய சுவற்றில் உள்ள போர்டில் தெலுங்கு எழுத்துக்கள், வண்டி எண்களில் ஆந்திரா பதிவு எண்கள், ஆந்திரா பேருந்துகள் என தெலுங்கு வாடை வீசுகிறது.
சமீபத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்த 'வாரியர்' படத்திலும் இப்படித்தான் ஏமாற்றி இருந்தார்கள். அது போலவே 'வாத்தி' படத்திலும் செய்துள்ளார்கள் போலிருக்கிறது. பேசாமல் ஒரு மொழியில் எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் படம் என அறிவிக்கலாமே ?. எதற்கு ரசிகர்களை இப்படி ஏமாற்ற வேண்டும் ?.