அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் 'வாத்தி'.
இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. யு டியூபில் வெளியான இரண்டு மொழி டீசர்களில் தமிழ் டீசரை விட தெலுங்கு டீசருக்குக் கூடுதலான வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் தனுஷ் படத்திற்கான வழக்கமான வரவேற்பு இது இல்லை. தமிழ் டீசர் 14 லட்சம் பார்வைகளையும், தெலுங்கு டீசர் 18 லட்சம் பார்வைகைளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு இரு மொழிப் படம் என்று சொன்னாலும் காட்சிகள் தெலுங்குப் படங்களைப் போலத்தான் உள்ளது. போலீஸ் நிலைய சுவற்றில் உள்ள போர்டில் தெலுங்கு எழுத்துக்கள், வண்டி எண்களில் ஆந்திரா பதிவு எண்கள், ஆந்திரா பேருந்துகள் என தெலுங்கு வாடை வீசுகிறது.
சமீபத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்த 'வாரியர்' படத்திலும் இப்படித்தான் ஏமாற்றி இருந்தார்கள். அது போலவே 'வாத்தி' படத்திலும் செய்துள்ளார்கள் போலிருக்கிறது. பேசாமல் ஒரு மொழியில் எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் படம் என அறிவிக்கலாமே ?. எதற்கு ரசிகர்களை இப்படி ஏமாற்ற வேண்டும் ?.