நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் என்கிற படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ராம் இயக்கிய தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் வசந்த் ரவியின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்தே ஜெயிலர் படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.