சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் |

பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் என்கிற படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ராம் இயக்கிய தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் வசந்த் ரவியின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்தே ஜெயிலர் படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.