ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

மகாநடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனுராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆபரின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகிகள் இருவருமே கலந்து கொண்டனர்.
ராஷ்மிகா இந்த படத்தில் நடித்தது குறித்து பேசும்போது, “இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரின் கதையை சொல்லி படத்தை நகர்த்தி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் பற்றி என்னிடம் இயக்குனர் கூறியபோது இதை என்னால் செய்து விட முடியுமா என்கிற ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் கொடுத்த உற்சாகத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறினார். இந்த படம் 70களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது




