கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

மகாநடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனுராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆபரின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகிகள் இருவருமே கலந்து கொண்டனர்.
ராஷ்மிகா இந்த படத்தில் நடித்தது குறித்து பேசும்போது, “இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரின் கதையை சொல்லி படத்தை நகர்த்தி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் பற்றி என்னிடம் இயக்குனர் கூறியபோது இதை என்னால் செய்து விட முடியுமா என்கிற ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் கொடுத்த உற்சாகத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறினார். இந்த படம் 70களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது