சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மகாநடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனுராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆபரின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகிகள் இருவருமே கலந்து கொண்டனர்.
ராஷ்மிகா இந்த படத்தில் நடித்தது குறித்து பேசும்போது, “இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரின் கதையை சொல்லி படத்தை நகர்த்தி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் பற்றி என்னிடம் இயக்குனர் கூறியபோது இதை என்னால் செய்து விட முடியுமா என்கிற ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் கொடுத்த உற்சாகத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறினார். இந்த படம் 70களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது




