பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மீ டூ புகார்கள் அதிகமாக வெளிவந்த நேரத்தில் இயக்குனர் சுசி கணேசன் மீது இயக்குனர் லீனா மணிமேகலை புகார் அளித்தார். இந்த புகாரால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது என்று கூறி சுசி கணேசன் சைதாப்பேட்டை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் லீனா மணிமேகலை ஆஜராகவில்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மணிமேகலை இந்த வழக்கில் ஆஜராக மாட்டார். அவர் இந்திய இறையாண்மையையும், சட்டத்தையும் மதிக்காதவர் அதனால் அவர் இல்லாமலேயே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக லீனா மணிமேகலை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ககூடாது என்று சுசிகணேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.