மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் |

மீ டூ புகார்கள் அதிகமாக வெளிவந்த நேரத்தில் இயக்குனர் சுசி கணேசன் மீது இயக்குனர் லீனா மணிமேகலை புகார் அளித்தார். இந்த புகாரால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது என்று கூறி சுசி கணேசன் சைதாப்பேட்டை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் லீனா மணிமேகலை ஆஜராகவில்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மணிமேகலை இந்த வழக்கில் ஆஜராக மாட்டார். அவர் இந்திய இறையாண்மையையும், சட்டத்தையும் மதிக்காதவர் அதனால் அவர் இல்லாமலேயே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக லீனா மணிமேகலை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ககூடாது என்று சுசிகணேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.