சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாள நடிகர்களில் தனது வித்தியாசமான கதை தேர்வால் மலையாள திரையுலகை மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் சேர்த்து ஒருவித ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய உள்ளவர் நடிகர் பஹத் பாசில். அதன் விளைவுதான் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் அவர் நடித்த புஷ்பா மற்றும் விக்ரம் படங்கள் ஹிட்டானதுடன் தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகராகவும் மாறியுள்ளார் பஹத் பாசில்.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் ஜூலை-22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சஜிமோன் பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இந்தப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள சோளப்பெண்ணே என்கிற லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா கூறும்போது, “பஹத் பாசில், நீங்கள் எப்போதுமே உங்களுடைய கதைகளால் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.. மலையான் குஞ்சு படத்தின் ட்ரெய்லரை பார்த்து வியந்தேன்.. உண்மையிலேயே வித்தியாசமான ஒரு முயற்சி” என்று பாராட்டி உள்ளதோடு இந்த படத்தை தயாரித்த இயக்குனர் பாசிலுக்கு தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.