அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மலையாள நடிகர்களில் தனது வித்தியாசமான கதை தேர்வால் மலையாள திரையுலகை மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் சேர்த்து ஒருவித ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய உள்ளவர் நடிகர் பஹத் பாசில். அதன் விளைவுதான் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் அவர் நடித்த புஷ்பா மற்றும் விக்ரம் படங்கள் ஹிட்டானதுடன் தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகராகவும் மாறியுள்ளார் பஹத் பாசில்.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் ஜூலை-22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சஜிமோன் பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இந்தப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள சோளப்பெண்ணே என்கிற லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா கூறும்போது, “பஹத் பாசில், நீங்கள் எப்போதுமே உங்களுடைய கதைகளால் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.. மலையான் குஞ்சு படத்தின் ட்ரெய்லரை பார்த்து வியந்தேன்.. உண்மையிலேயே வித்தியாசமான ஒரு முயற்சி” என்று பாராட்டி உள்ளதோடு இந்த படத்தை தயாரித்த இயக்குனர் பாசிலுக்கு தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.