கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தற்போது ராம்சரனின் 15வது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். கியாரா அத்வானி, அஞ்சலி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். வழக்கம்போல் இந்த படத்தையும் பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது ராம்சரண் படத்தை அடுத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கும் ஷங்கர், அந்த படத்தை முடித்ததும் தனது கனவு படத்தை சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் தண்ணீருக்கு அடியில் அறிவியல் கலந்த ஒரு கதையில் உருவாகிறது. மேலும் சர்வதேச தரத்தில் உருவாகும் அந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.