என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி ஹாலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் என்ற படம் 1100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் தற்போது ராஜமௌலி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவது எப்போது? என்பது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்ஆர்ஆர் படத்தையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஒரு மெகா படத்தை இயக்கப்போறேன். இந்த படத்துக்கு பிறகு நான்கு படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அந்த படங்களை முடித்த பிறகு தான் எனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவேன். அந்த படத்தை இயக்குவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் ராஜமவுலி.
இந்த மகாபாரத படத்தை ராஜமௌலி கிடப்பில் போட்டு விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது குறித்து தற்போது அவர் இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளார்.