'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

திருக்கடையூர் கோயிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர், ஆயுஷ் ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் அவரது மனைவி ஷோபாவும் பங்கேற்றார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா. இவர்களது மகனான விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார். எஸ்ஏசி தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நேற்று தனது 80வது பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆயுஷ் ஹோமம் வளர்த்து காலசம்கார மூர்த்தியை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதிகம். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 வயது எழுபது எண்பது வயது பூர்த்தி அடைந்தவர்கள் கோயில் சிறப்பு வழிபாடு செய்து மணிவிழா சதாபிஷேக விழா செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி சுவாமி அம்பாள் சன்னதியில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.