அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
திருக்கடையூர் கோயிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர், ஆயுஷ் ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் அவரது மனைவி ஷோபாவும் பங்கேற்றார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா. இவர்களது மகனான விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார். எஸ்ஏசி தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நேற்று தனது 80வது பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆயுஷ் ஹோமம் வளர்த்து காலசம்கார மூர்த்தியை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதிகம். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 வயது எழுபது எண்பது வயது பூர்த்தி அடைந்தவர்கள் கோயில் சிறப்பு வழிபாடு செய்து மணிவிழா சதாபிஷேக விழா செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி சுவாமி அம்பாள் சன்னதியில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.