கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த புதுமண ஜோடி தாய்லந்து சென்று தங்களது ஹனிமூனைக் கொண்டாடி பின்னர் இந்தியா திரும்பியது.
இந்தியா வந்ததுமே நயன்தாரா மும்பைக்குச் சென்றுவிட்டாராம். இன்று முதல் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து தனது படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கப் போகிறாராம்.
அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க கலந்து கொள்வாராம். நயன்தாராவின் அபிமான இயக்குனராக அட்லீ இயக்கும் இந்தப் படம் மூலம் நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.
பொதுவாக பாலிவுட்டில் மிகவும் இளம் வயதில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்வார்கள். ஆனால், நயன்தாரா திருமணத்திற்குப் பிறகே பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




