மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணி இணைந்த 'ஆர்ஆர்ஆர்' படம் பெரும் வெற்றி பெற்று 1000 கோடி வசூலைப் பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் இந்தப் படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வந்த படங்களில், தங்களது ஓடிடி தளத்தில் 45 மில்லியன் மணி நேரப் பார்வைகளை இந்தப் படம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி தளம் என இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்து ஒரு படத்தை உருவாக்க பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலியிடமும், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஆர்ஆர்ஆர்' படம் போன்றே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
எல்லாம் கூடி வந்தால் ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணி இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் இந்த 'ஆர்ஆர்ஆர்' கூட்டணியின் அடுத்த படம் உருவாகலாம் என்கிறார்கள்.