வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அடுத்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அக்டோபர் 5ம் தேதி முதல் பேருந்து பிரச்சாரப் பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் பவன் கல்யாண். அதற்காக அவருடைய பாதுகாப்புக்கென 8 கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வண்டிகளை வாங்கியுள்ளார். அந்த வண்டிகள் நேற்று பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல உள்ளதாம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த செய்திகள் வர ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் பவன் கல்யாணைக் கிண்டலடித்தும் வருகிறார்கள்.