சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அடுத்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அக்டோபர் 5ம் தேதி முதல் பேருந்து பிரச்சாரப் பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் பவன் கல்யாண். அதற்காக அவருடைய பாதுகாப்புக்கென 8 கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வண்டிகளை வாங்கியுள்ளார். அந்த வண்டிகள் நேற்று பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல உள்ளதாம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த செய்திகள் வர ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் பவன் கல்யாணைக் கிண்டலடித்தும் வருகிறார்கள்.




