300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அடுத்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அக்டோபர் 5ம் தேதி முதல் பேருந்து பிரச்சாரப் பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் பவன் கல்யாண். அதற்காக அவருடைய பாதுகாப்புக்கென 8 கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வண்டிகளை வாங்கியுள்ளார். அந்த வண்டிகள் நேற்று பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல உள்ளதாம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த செய்திகள் வர ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் பவன் கல்யாணைக் கிண்டலடித்தும் வருகிறார்கள்.