ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசை ரசிகர்களால் கேகே என்று செல்லமாக அழைக்கப்பட்ட கிருஷ்ண குமார் கடந்த மாதம் 31ம் தேதி கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. மறைவு குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கறிஞர் ரவிசங்கர் சட்டோபாத்யாய் என்பவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கே.கே கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 2 நாட்கள் அங்கு தங்கி இருந்துள்ளார். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கச்சேரி முடித்து வெளியேறிய வீடியோக்களில் கேகேவுக்கு அதிக அளவிலான வியர்வை வெளியேறுவதும், அவர் சோர்வுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான உண்மை நிலவரம் அறிந்து உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் அவரது மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை நேற்று பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா இதனைஅவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.