வங்க எழுத்தாளரின் 'ஆனந்தம் மடம்' நாவலைத் தழுவி தயாராகும் '1770' | பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனை கலாய்த்த ராஜூ : ஆடிஷனில் நடந்த சுவாரசியம் | சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் | நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் |
இசையமைப்பாளர் இளையராஜா சென்னையை தொடர்ந்து கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இன்று (ஜுன் 2) இளையராஜாவின் 80வது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோவை மக்களை இன்னிசை மழையில் நனையவிடப்போகிறார். கோவை கொடீசியா வளாகத்தில் மாலை 6 மணியளவில் ‛ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். இவர்களோடு இளையராஜாவும் சில பாடல்களை பாட உள்ளார். அதோடு அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அவரது பதிவில், ‛இந்த சிறப்பு நாளில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு அற்புதமான மற்றும் மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது' எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இது ‛டபுள்' ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.