ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பஹத் பாசில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீவ் ரவி. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீது மோகன்தாசின் கணவர். கம்மட்டிப்பாடம் படத்தை முடித்ததும் மீண்டும் ஒளிப்பதிவாளராக மாறி தனது மனைவி இயக்கத்தில் நிவின்பாலி நடித்த மூத்தோன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து நிவின்பாலி நடிக்கும் 'துறமுகம்' (துறைமுகம்) என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி நடைபெற்ற நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனதால், இளம் நடிகர் ஆசிப் அலியை வைத்து குட்டாவும் சிக்ஷையும் என்கிற போலீஸ் கதையை இயக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறிமாறி நடைபெற்று முடிந்து, தற்போது இரண்டு படங்களுமே ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக இருப்பதுதான் ஆச்சர்யம். குட்டாவும் சிக்ஷையும் மே-27ஆம் தேதியும், துறமுகம் படம் ஜூன்-3ஆம் தேதியும் வெளியாக இருக்கின்றன,
துறமுகம் படம் 1940களில் நடைபெறும் கதையாக, துறைமுக தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குட்டாவும் சிக்ஷையும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லாராக உருவாகியுள்ளது.