மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

மலையாள முன்னணி நடிகரான திலீப், பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். அதன்பிறகு நடிகை கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டார் என்றும், இதற்காக அவர் ஜாமீனில் விடுதலையானதும் ஒரு முக்கிய நபரை சந்தித்து திட்டம் தீட்டினார் என்றும் மலையாள இயக்குனர் பாலசந்திரகுமார் புகார் அளித்தார்.
இதனால் நடிகை கடத்தல் வழக்குடன் திலீப் மீது கொலை சதிதிட்ட வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் பாலசந்திரகுமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திலீப்பின் நண்பரும், நட்சத்திர ஓட்டல் அதிபருமான சரத்நாயரை போலீசார் கைது செய்தனர். சரத்நாயரும், திலீப்பும் சேர்ந்த கொலை சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை பாலசந்திரகுமார் போலீசிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொலை சதி வழக்கு தீவிரமடைந்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், தற்போதைய மனைவி காவ்யா மாதவன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் திலீப் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.