விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கீர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |

'ஆர்ஆர்ஆர்' என்ற ஆயிரம் கோடி படத்தில் நடித்து விட்டு அடுத்த சில வாரங்களிலேயே 'ஆச்சார்யா' என்ற படுதோல்விப் படத்தில் நடிப்போம் என ராம்சரண் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அப்பாவுடனும் சேர்ந்து நடித்திருந்தார். இதனால், இப்படம் பெரிய அளவில் ஓடும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தைப் பார்க்க யாருமே ஆர்வம் காட்டாமல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தார்கள். வெளிவந்த அனைத்து விமர்சனங்களுமே மிகவும் நெகட்டிவ்வாகத்தான் வந்தன. இந்நிலையில் ஒரு வினியோகஸ்தர் சிரஞ்சீவிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே ஒரு கடிதம் எழுதினார்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தின் தயாரிப்பாளராக ராம்சரண் நஷ்டஈட்டைத் தரத் தயாராகி வருகிறாராம். 'ஆச்சார்யா' தோல்வியடைந்தாலும் சிரஞ்சீவி நடித்து அடுத்து 'காட்பாதர், போலா சங்கர்' உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன.




