ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

'ஆர்ஆர்ஆர்' என்ற ஆயிரம் கோடி படத்தில் நடித்து விட்டு அடுத்த சில வாரங்களிலேயே 'ஆச்சார்யா' என்ற படுதோல்விப் படத்தில் நடிப்போம் என ராம்சரண் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அப்பாவுடனும் சேர்ந்து நடித்திருந்தார். இதனால், இப்படம் பெரிய அளவில் ஓடும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தைப் பார்க்க யாருமே ஆர்வம் காட்டாமல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தார்கள். வெளிவந்த அனைத்து விமர்சனங்களுமே மிகவும் நெகட்டிவ்வாகத்தான் வந்தன. இந்நிலையில் ஒரு வினியோகஸ்தர் சிரஞ்சீவிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே ஒரு கடிதம் எழுதினார்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தின் தயாரிப்பாளராக ராம்சரண் நஷ்டஈட்டைத் தரத் தயாராகி வருகிறாராம். 'ஆச்சார்யா' தோல்வியடைந்தாலும் சிரஞ்சீவி நடித்து அடுத்து 'காட்பாதர், போலா சங்கர்' உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன.