பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக ஹிந்தி நடிகையான ஆலியா பட் அறிமுகமானார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற சர்ச்சை படம் வெளிவந்த உடன் எழுந்தது. மேலும், படம் பற்றிய சில புகைப்படங்கள், பதிவுகளை ஆலியா பட் நீக்கிவிட்டார் என்றும் பரபரப்பானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆலியா பட் பற்றிய சர்ச்சைகளுக்குப் பதில் அளித்துள்ளார் ராஜமவுலி. “எனக்கு உண்மையில் ஆலியா பட்டை ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடிப்பிற்கும், திறமைக்கும் அவரை மிகவும் மதிக்கிறேன். அவருடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அவரும் என்னைப் பற்றி இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அவரும் நானும் நடிகையாக, இயக்குனராகப் பணியாற்றினோம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருக்குப் பெரிய கதாபாத்திரம் இல்லை. அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பது தெரியும், ஆனால், இரண்டு சக்திகளை ஒன்றிணைக்கும் மிக மிக முக்கிய கதாபாத்திரம். அதைத்தான் நான் ஆலியாவிடம் சொன்னேன், அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவருடன் வரும் நாட்களில் உண்மையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருக்கிறேன்,” எனப் பதிலளித்துள்ளார்.