விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக ஹிந்தி நடிகையான ஆலியா பட் அறிமுகமானார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற சர்ச்சை படம் வெளிவந்த உடன் எழுந்தது. மேலும், படம் பற்றிய சில புகைப்படங்கள், பதிவுகளை ஆலியா பட் நீக்கிவிட்டார் என்றும் பரபரப்பானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆலியா பட் பற்றிய சர்ச்சைகளுக்குப் பதில் அளித்துள்ளார் ராஜமவுலி. “எனக்கு உண்மையில் ஆலியா பட்டை ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடிப்பிற்கும், திறமைக்கும் அவரை மிகவும் மதிக்கிறேன். அவருடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அவரும் என்னைப் பற்றி இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அவரும் நானும் நடிகையாக, இயக்குனராகப் பணியாற்றினோம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருக்குப் பெரிய கதாபாத்திரம் இல்லை. அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பது தெரியும், ஆனால், இரண்டு சக்திகளை ஒன்றிணைக்கும் மிக மிக முக்கிய கதாபாத்திரம். அதைத்தான் நான் ஆலியாவிடம் சொன்னேன், அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவருடன் வரும் நாட்களில் உண்மையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருக்கிறேன்,” எனப் பதிலளித்துள்ளார்.