இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். கருப்பின நடிகர்களிலேயே உலகில் அதிகமான ரசிகர்களை வைத்திருப்பவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவருக்கு சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் தனது மனைவி குறித்து மோசமாக வர்ணணை செய்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார்.
இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும் ஆஸ்கர் அகடாமி அவருக்கு 10 ஆண்டுகள் தடைவிதித்தது. 10 ஆண்டுகள் வரை வில் ஸ்மித்தின் எந்த படத்தையும் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு ஏற்காது. அவரும் விழாவில் கலந்து கொள்ள முடியாது. இந்த தண்டனையை மனப்பூர்வமாக ஏற்பதாக வில் ஸ்மித் அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில் ஸ்மித் இந்தியா வந்தார். அவரது திடீர் வருகை அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் வருகைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் அவர் இஸ்கான் பக்தர். அதனால் வந்த வேகத்தில் இஸ்கான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்றதும் இஸ்கான் பக்தர்கள் தான்.
அடுத்து அவர் கரன் ஜோஹர் இயக்கும் ஸ்டூடன்ட் ஆப் தி ஈயர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மூன்றாவது இந்தியா, ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த மூன்று காரணங்களுக்காக அவர் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது.