பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் |

சென்னை : படம் தயாரிப்பு தொடர்பாக நடிகர் விமல் 1.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறி சிங்கார வடிவேலன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கார வடிவேலன், 45; பட வினியோகஸ்தர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: நான், 'மெரினா பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை வினியோகம் செய்து வருகிறேன். நடிகர் விமல், 2016ல் அறிமுகமானார். இவர் நடித்த இஷ்டம், புலி வால், மாப்பிள்ளை சிங்கம் என பல படங்கள் தோல்வியடைந்தன. இதனால், 'மார்க்கெட்' இழந்தார். அப்போது, திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் வாயிலாக, மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி செய்யுமாறும், விமல் கூறினார். என் நண்பரும், தயாரிப்பாளருமான கோபியிடம், 5 கோடி ரூபாய் வாங்கி கொடுத்தேன்.
![]() |