என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
2009ல் வெண்ணிலா கபடி குழு மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ராட்சசன் படம் மூலம் அதிக அளவில் ரசிகர்களை சம்பாதித்தார். அதற்கடுத்ததாக அவரது படங்கள் மீது ஓரளவு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது அதனால் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் நேரடி தொடர்பில் இருந்து வந்த விஷ்ணு விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய படங்களை பற்றியும் தன்னுடைய சொந்த விஷயங்களை பற்றியும் அவ்வப்போது அப்டேட் செய்து வந்தார்.
ஆனால் தற்போது கொஞ்ச காலத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.. வாழ்க்கைக்கு ஒய்வு ரொம்ப முக்கியம் என அவர் இதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் சமீபகாலமாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி கொடுத்த மோசடி புகாரும் அதுதொடர்பாக சோசியல் மீடியாவில் அவரிடம் எழுப்பப்படும் கேள்விகளும், பதிவிடப்படும் கருத்துக்களும் அவருக்கு தேவையில்லாத சங்கடத்தையும், மன உளைச்சலையும் கொடுத்திருப்பதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.