அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி |
2009ல் வெண்ணிலா கபடி குழு மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ராட்சசன் படம் மூலம் அதிக அளவில் ரசிகர்களை சம்பாதித்தார். அதற்கடுத்ததாக அவரது படங்கள் மீது ஓரளவு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது அதனால் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் நேரடி தொடர்பில் இருந்து வந்த விஷ்ணு விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய படங்களை பற்றியும் தன்னுடைய சொந்த விஷயங்களை பற்றியும் அவ்வப்போது அப்டேட் செய்து வந்தார்.
ஆனால் தற்போது கொஞ்ச காலத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.. வாழ்க்கைக்கு ஒய்வு ரொம்ப முக்கியம் என அவர் இதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் சமீபகாலமாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி கொடுத்த மோசடி புகாரும் அதுதொடர்பாக சோசியல் மீடியாவில் அவரிடம் எழுப்பப்படும் கேள்விகளும், பதிவிடப்படும் கருத்துக்களும் அவருக்கு தேவையில்லாத சங்கடத்தையும், மன உளைச்சலையும் கொடுத்திருப்பதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.