'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
திருமணத்திற்கு முன்பு ஒரு காலகட்டத்தில் நடிகை சமந்தா டாட்டூ வரைந்து கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டி வந்தார். தான் அறிமுகமான ஏ மாய சேசாவே என்கிற படத்தில் நடித்ததன் ஞாபகார்த்தமாக முதன்முறையாக ஒய்எம்சி என்கிற டாட்டூவை குத்திக்கொண்டார். அதன் பிறகு நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டபின் அவரது பெயரையும் இரண்டு முறை பச்சை குத்திக் கொண்டு இது எங்கள் காதலின் நினைவுச் சின்னம் என்று அப்போது பெருமிதத்துடன் கூறினார் சமந்தா.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எந்த விதமான டாட்டூக்களை குத்திக் கொள்ளலாம் என முன்பு ஐடியாக்கள் வைத்திருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? என்னுடைய இளமை காலத்தில் நான் ஒருபோதும் டாட்டூ குத்திக்கொள்ள கூடாது என்பதில் மிகத்தீவிரமாக இருந்தேன்” என்று பதில் அளித்துள்ளார்.