தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வாத்தி படப்பிடிப்பில் இணைந்து கொண்டார் தனுஷ். தெலுங்கு தமிழில் தயாராகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிக்கிறார்கள். இந்த படம் கல்வி மாபியாக்களின் கதை என்றும், இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
படத்திற்கு ஜீ.பி.பிரகாஷ் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கி படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.