20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வாத்தி படப்பிடிப்பில் இணைந்து கொண்டார் தனுஷ். தெலுங்கு தமிழில் தயாராகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிக்கிறார்கள். இந்த படம் கல்வி மாபியாக்களின் கதை என்றும், இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
படத்திற்கு ஜீ.பி.பிரகாஷ் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கி படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.