நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சமந்தாவை பொறுத்தவரை தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்து வரும் ஒரே படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பு தொடர்பாக அவ்வப்போது சென்னை வந்து சென்றார் சமந்தா. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சமந்தாவை சந்தித்த நடிகர் சதீஷ் அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கத்தி பட நினைவுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. அந்த படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்து இருந்த சதீஷூம் சமந்தாவுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்து இருந்தார். அதன்பிறகு நீண்ட நாளைக்கு பின் சமந்தாவை இப்போதுதான் சந்தித்துள்ளதாக கூறியுள்ள சதீஷ், கத்தி பட நாட்களை மிஸ் பண்ணுவதாக கூறியதுடன் வரும் காலத்தில் சமந்தா நடிக்க உள்ள படங்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.