பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய 'கலைஞரின் கண்ணம்மா' என்ற படத்தை இயக்கி, தயாரித்தவர் பாபா விக்ரம். இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதவிர என் இதய ராணி, பொம்மை நாய்கள் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார். கடைசியாக இமான் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
83 வயதான பாபா விக்ரம், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.