படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'ராதேஷ்யாம்'. பான்-இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லாமல் மிகவும் மோசமாக இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் இப்படத்தின் வசூல் 'டிசாஸ்டர்' என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. நேற்று திங்கள் கிழமை என்பதால் நேற்றைய தினம்தான் இப்படத்தின் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும் என காத்திருந்தார்கள். தெலுங்கிலேயே பல தியேட்டர்களில் மக்கள் வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாக உள்ள நிலையில் 'ராதேஷ்யாம்' எபெக்ட் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. பிரபாஸ் படம் ஆக்ஷன் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்து காதல் படத்தைப் பார்த்து ஏமாந்து போனார்கள் ரசிகர்கள்.
'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரப் போராட்டக் கதை என்றாலும் அதன் நேட்டிவிட்டி, கதைக்களம் தெலுங்குப் பிரதேசத்தைச் சேர்ந்தது. அதை மற்ற மொழிகளில் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பது படம் வரும் போதுதான் தெரியும்.